Sunday, January 23, 2011

இஸ்லாத்தில் பெண்ணின் பெருமை

தேன்துளி Then Thuli 2:29 AM

 
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்


...

ரியாஸ் அகமது

மனித வாழ்வின் அடிப்படை தேவைஉணவு  2 உடை 3 உறையுள். இல்லற வாழ்கையில் இம்மூன்றும் சேர்ந்தே  இருப்பது பெண்ணிடம் இதை அல்குர்ஆன் அழகாக விளக்குகிறது.

பெண்களுக்கு வேறெங்கும் கிடைக்காத மதிப்பும் பெருமையும் இஸ்லாத்தில் கிடைப்பதை காணலாம்..

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள் ...(2 : 223 )

உணவில்லை என்றால் உயிர் ஊஞ்சலாடும்உணவு தேவைக்கு விளை  நிலம் மிக முக்கியமானது. இப்படியான விளை நிலத்தை எப்படியெல்லாம் பராமரித்தால் அதில் நல்லா பலன் கிடைக்கும் என்பதை அறிந்து அதன்படி நடந்தால்  நல்ல பலன் கிடைத்து அதன் மூலம் சந்தோசமும் கிடைக்கும். இந்த விளை நிலத்திற்கு நிகரானவளே  உங்கள் மனைவியர்.

(
பெண்களாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடை. (ஆண்களாகியநீங்கள் அவர்களுக்கு  ஆடை... (2 :187 )

கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் எந்தளவு பரஸ்பர நம்பிக்கையுடனும், புரிதலுனர்வுடனும், பகிர்வுடனும் இருக்கணும் என்பதை இதை விட நாகரிகமாக கூற முடியாது.

ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் ஆடை போன்றவர்கள் எனும் போது அவர்கள் முழுமை பெறுகிறார்கள்.

உடலோடு ஆடை எப்படி ஒட்டி உறவாடுகிறதோ அது போல கணவன் மனைவியருடைய ஒட்டுறவு உடல், உள்ளதாலும் ஓன்று சேர்த்து இருக்கணும். மானத்தை மறைப்பது, அழகையும், அந்தஸ்தையும் தருவது, தட்ப வெப்ப சூழ்நிலைகளில் காப்பதும் ஆடையே. குடும்ப வாழ்வில் கணவன்,மனைவி ஆடையை போல் இருக்கணும் என்கிறது இந்த வசனம்
 உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை  ஏற்படுத்தினான் ...(16 :80 )

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே மனைவியரை உங்களுக்காக படைத்தது ...(30 : 21 )

மனிதன் எங்கே தங்கி இருந்து பரிவையும், பாசத்தையும், மன அமைதியையும் பெறுகிறானோ அந்த இடமே அவனுக்கு அமைதி தளமாகிய வீடாகும் .இத்தகைய பரிவு, பாசம், மன அமைதி அனைத்தையும் குடும்ப தலைவியாகிய மனைவியோடு சேர்த்து கணவன் பெறுகிறான் என்பதை திருமறை வசனம் கூறுகிறது.

Riyas Ahamad

9 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது என்ன பர்ஜ் கலிஃபா உயர்ந்த கட்டிடம் மாதிரி நீளமாக (உயரமாக) இருக்கிறது !

sabeer.abushahruk said...

Abu ibuRaakim, it is obviously waiting for the genius athirai nirubar thajudheen to reconstruct who promised to do so.
-Sabeer and Zakir

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், தேன் துளிக்கு நிறைய மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி இருக்கு? பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்களின் கருத்துக்களை 4 காக்காமார்களும் சொல்லுங்களே.

sabeer.abushahruk said...

தாஜுதீன் தொடுவதெல்லாம்
தாஜ்மஹால்தான்!

(ஐஸ்ஸ்ஸ்...)

உண்மையிலேயே நல்லாருக்கு. இனி இணைக்கலாம் அதிரை மணத்தில், ஜாகிர் ஹாஜா ரியாஸ் ஒத்துக்கொள்ளும்பட்சத்தில்

ZAKIR HUSSAIN said...

தாஜுதீன் எங்கள் வீட்டுப்பிள்ளையா இது என இவ்வளவு அழகு சேர்த்திருக்கிறீர்கள் , மிக்க நன்றி

இனிமேல் அதிரைமணத்தில் இணைக்களாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்ன காக்கா'S... தலப்பா கட்டியாச்சு வேட்டியை மடிச்சு கட்டுங்க !? நானும் ரெடிதான் !

மன்னிக்கவும் : பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்தை இங்கே பதிந்ததற்கு... கண்ட அழகை கொண்ட மக்களிடம் சொல்லிச் சிலாகித்திட இந்த பதிவுக்குள் இட்டேன்...

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ரியாஸ் காகாவின் பெண்ணின் பெருமை அருமை

தாஜுதீன் செய்த மாற்றங்கள் தேன் துளியில் தேனாய் இனிக்கின்றது

Unknown said...

இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம் இதனால் மனிதன் பெருமை அற்றவனாக வாழவேண்டும்

அதிரை தும்பி said...

தேனாய் இனிக்கின்றது

Post a Comment

உமர் தமிழ்